தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றிக் கொண்டு வருகிறார். அதன்படி கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அது குறித்த அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. இதுபற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
இந்நிலையில் கூட்டுறவு சங்கங்களில் வாங்கப்பட்ட நகை கடன் தள்ளுபடி குறித்து இன்னும் நான்கு நாட்களில் முதல்வர் அறிவிப்பார் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல் தெரிவித்துள்ளார். கூட்டுறவு சங்கங்களில் நகை கடன் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளது. இதனால் நகை கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியாகுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.கூட்டுறவு சங்கங்களில் முறைகேடாக விவசாய கடன் பெற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.