Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அடிக்கடி வந்த தகராறு…. தொழிலாளியின் சோக முடிவு…. போலீஸ் விசாரணை….!!

குடும்பத்தகராறு காரணமாக கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியில் ஜெகநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக இருந்துள்ளார். இவருக்கு பூங்கொடி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்களும், 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் குடும்பபிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் மனமுடைந்த ஜெகநாதன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெகநாதன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |