அதிமுகவின் முன்னாள் அவைத் தலைவர் புலமைபித்தன் உடலுக்கு சசிகலா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
பிரபல கவிஞரும், அதிமுக முன்னாள் தலைவருமான புலவர் புலமைபித்தன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு அவர் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள் என அனைவரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நீலாங்கரை வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு சசிகலா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது மனைவிக்கு சசிகலா ஆறுதல் கூறினார்.