Categories
மாநில செய்திகள்

சசிகலாவுக்கு தொடர்புடைய பையனூர் பங்களா முடக்கம்… வருமான வரித்துறை அதிரடி…!!

சென்னை அடுத்த பையனூரில் 22 ஏக்கரில் அமைந்துள்ள சசிகலாவுக்கு தொடர்புடைய ரூ.1,600 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டது.

சென்னையை அடுத்த பையனூர் என்ற பகுதியில் சசிகலாவிற்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள பங்களா முடக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு சசிகலா, ஜெயலலிதாவுக்கு சொந்தமான 157 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். சோதனையின்போது பினாமி சொத்துகள் என வகைப்படுத்தப்பட்ட சொத்துக்களை கைப்பற்ற வருமானவரி துறை முடிவு செய்திருந்தது.

அதன்படி சென்னை அடுத்த பையனூரிள்ள சசிகலாவுக்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள பங்களா முடக்கப்பட்டுள்ளது. இவை முடக்கப்பட்டதாக அதிகாரிகள் அங்கு நோட்டீஸ் ஒட்டி உள்ளனர். இதையடுத்து 2019-ல் 1600 கோடி சொத்துக்கள், 2020 ஆம் ஆண்டில் சசிகலா தொடர்புடைய 65 சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |