சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். அதன்படி இன்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளதாவது: அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வு 1.1.2022 முதல் வழங்கப்படும். அகவிலைப்படி அமல்படுத்துவதால் 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். அரசுப்பணிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். சத்துணவு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58-லிருந்து 60ஆக நீட்டிக்கப்படும். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள் பணிகள் விரைவில் நிரப்பப்படும் என்று அறிவித்துள்ளார்.
Categories
தமிழ்நாடு அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!
