Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல…. சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பண்ணா வலசு பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு 6 வயதில் அறிவழகன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கிருந்த மின் சுவிட்சை அறிவழகன் போட்ட போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அறிவழகனை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அறிவழகனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அரூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் காவல்துறையினர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிறுவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |