Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

துப்பாக்கி சுடும் பயிற்சி…. மொத்தம் 15 தோட்டாக்கள்…. கலந்துகொண்ட போலீஸ்….!!

ஒடசல்பட்டி கூட்ரோடு அருகில் காவல்துறையினருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி கொடுக்கப்பட்டது.

தர்மபுரி மாவட்டத்தில் காவல்துறையில் வேலை பார்க்கும் துணை போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவல்துறையினருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்காக ஒடசல்பட்டி கூட்ரோடு அருகில் உள்ள வனப்பகுதியில் காவல்துறை சார்பாக துப்பாக்கி சுடும் பயிற்சி 1,400 நபர்களுக்கு அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் தினசரி 100 முதல் 150 வரையிலான காவல்துறையினருக்கு ஆயுதப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னசாமி மற்றும் போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சியை அளித்து வருகின்றனர்.

எனவே இதில் கலந்துகொள்ளும் காவலர்களுக்கு ரத்த அழுத்தம், கண்பார்வை பரிசோதனை போன்ற மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனையடுத்து பயிற்சியில் துப்பாக்கியை எவ்வாறு கையாள்வது, சுடுவதற்கு தயாராவது என்பது குறித்த பயிற்சிகளை காவல்துறையினருக்கு வழங்கி வருகின்றனர். அதன் பின் ஒவ்வொரு காவல்துறையினருக்கும் 3 சுற்றுகள் என 15 தோட்டாக்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனைத்தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறையினர் இங்கு கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த பயிற்சியானது வருகின்ற 21-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

Categories

Tech |