லண்டனில் ரயிலில் அமர்ந்திருந்த ஆண் பயணியிடம் ஒரு பெண் கடுமையான வார்த்தைகளால் பேசி இனவெறித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனின் Ealing Broadway station என்ற ரயிலில், மாலை நேரத்தில் இளம்பெண்கள் இருவர் ரயிலில் ஏறியுள்ளார்கள். அதன் பின்பு, இருவரும் ஒருவரை ஒருவர் தள்ளி விளையாடிக் கொண்டிருந்துள்ளார்கள். இது அருகே அமர்ந்திருந்த ஒரு நபருக்கு இடையூறாக இருந்துள்ளது. எனவே, அவர் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? என்று கேட்டுள்ளார்.
அப்போது, அவர்களில் ஒரு பெண் கோபமடைந்து, அந்த நபரை மோசமாகவும், அருவருப்பாகவும் திட்டியுள்ளார். மேலும், இனவெறி தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இச்சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
தற்போது, அந்த பெண்ணின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்த பெண் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் தங்களிடம் தெரிவிக்குமாறு காவல்துறையினர் கேட்டுள்ளார்கள்.