Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

#Breaking : ‘பிகில்’ படத்திற்கு தடை …. தீர்ப்பு ஒத்திவைப்பு ….!!

பிகில்’ படத்திற்கு தடை விதிக்கக்கோரிய வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.

பிகில் படத்தின் கதை தன்னுடையது , என்னுடைய கதையை திருடி பிகில் என்ற பெயரில் படம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் , பிகில் படத்தை வெளியீட தடை விதிக்க வேண்டுமெனவும் இயக்குனர் செல்வா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் அட்லி வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் ஏற்கனவே தெரிவித்திருந்தநிலையில் இன்று நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அட்லீ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 2018 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் பிகில் பட கதையை பதிவு செய்ய இருப்பதாகவும் , மனுதாரர் அக்டோபரில் தான் பதிவு செய்தார் என்றும் சொல்லப்படாது.

மேலும் விளம்பரத்திற்காகவும் , பணத்திற்காகவும் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் அட்லீ தரப்பில் வாதிடப்பட்டது. இதற்க்கு இயக்குனர் செல்வா தரப்பில் பணத்திற்க்கோ அல்லது விளம்பரத்திற்க்கோ வழக்கு தொடரவில்லை என்று வாதிடப்பட்டது. இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுரேஷ்குமார் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இதனால் அடுத்தவாரம் திங்கள் அல்லது செவ்வாய்கிழமை தீர்ப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |