அரிசி, பருப்பு மற்றும் சர்க்கரை ஆகிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்ததை தொடர்ந்து அரசு அப்பொருட்களுக்கு ஒரே மதிப்பை நிர்ணயித்துள்ளது.
இலங்கையில் அரிசி, பருப்பு மற்றும் சர்க்கரை ஆகிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதனடிப்படையில் இலங்கை அரசு அப்பொருட்களின் ஒரே மதிப்பை நிர்ணயம் செய்துள்ளது. இந்நிலையில் ஒரு கிலோ சர்க்கரை மொத்த விலையில் 116 ரூபாய் எனவும் சில்லரையில் 122 ரூபாய் என்றும் இலங்கை அரசு விலையை நிர்ணயம் செய்துள்ளது. இதனையடுத்து ஒரு கிலோ கீரை சம்பா அரிசி 125 ரூபாய்க்கும் மற்றும் சிவப்பு சம்பா அரிசி 103 ரூபாய்க்கும் விற்கப்பட வேண்டும் என இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து ஒரு கிலோ சிவப்பு நாட்டு அரிசி 98 ரூபாய்க்கும் பச்சரிசி 95 ரூபாய்க்கும் விற்கப்பட வேண்டும் என அந்நாட்டு அரசு விலையை நிர்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இலங்கை நுகர்வோர் விவகாரங்கள் ஆணையம் பொருட்களின் ஒரே மதிப்பை நிர்ணயம் செய்து அந்த விலைக்கு தான் விற்கப்பட வேண்டும் என வணிகர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.