Categories
மதுரை மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? வாலிபரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் பகுதியில் இருக்கும் கிணற்றில் ஆண் ஒருவர் சடலமாக மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த ஆணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் அதே கிராமத்தில் வசிக்கும் சக்திவேல் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சக்திவேல் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |