Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மது போதையில் ஏற்பட்ட தகராறு…. முதியவருக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை….!!

முதியவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சோலை கவுண்டம்பட்டி பிச்சை என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் குடிபோதையில் இரு சக்கர வாகனத்தின் சாவியை தொலைத்துள்ளார். அதன் பிறகு பிச்சை அவர் வீட்டில் இருக்கும் அருகே உள்ள துரைப்பாண்டியின் வீட்டில் வெளியே சாவியை தேடி பார்த்துள்ளார்.

இதனால் மது போதையில் இருக்கும்  பிச்சைக்கும் துரைப்பாண்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் துரைப்பாண்டி ஆத்திரமடைந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் பிச்சையை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு மருத்துவர்கள் பிச்சைக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிச்சையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளியான துரைப்பாண்டி வலைவீசி தேடி வந்துள்ளனர்.

Categories

Tech |