தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி பகுதியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரம்மநாயகம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஒரு தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிரம்மநாயகத்திற்கு திருமணமாகி யோகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் பிரம்மநாயகம் குடும்ப சூழ்நிலை காரணமாக களைக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் பிரம்மநாயகத்தை உடனடியாக மீட்டு அம்பை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக பிரம்மநாயகத்தை நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சிக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பிரம்மநாயகம் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த கல்லிடைக்குறிச்சி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.