சுவிட்சர்லாந்தில், ஒரு பிரெஞ்சு பெண் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சுவிட்சர்லாந்தில் இருக்கும் லூசேன் பகுதியின் அருகில், நேற்று காலையில், ஒரு பிரெஞ்சு பெண் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் காவல்துறையினர் உள்பட மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, Vaud மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளதாவது, 56 வயதுடைய பிரெஞ்சு பெண் குளியலறைக்கு சென்றிருக்கிறார்.
அப்போது திடீரென்று அவர், தன் மீது நெருப்பு வைத்து தீக்குளித்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து, காவல்துறையினர், அவரை காப்பாற்ற முயற்சித்ததில் மூன்று பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தீக்குளித்த அந்த பெண் சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தற்போது, காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.