சீனாவில் தயாரிக்கப்பட்ட கையெறி குண்டுகளுடன் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த போலீசார் சரூப் சிங் என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை செய்ததில் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புடன் தீவிர செயல்பாட்டில் இருந்தது தெரிய வந்தது. அவரிடமிருந்து சீனாவில் தயாரிக்கப்பட்ட பி-85 வகை இரண்டு கையெறி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இதன் மூலம், மேலும் ஒரு பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டுள்ளதாக, அம்மாநில டிஜிபி தெரிவித்தார்.