மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தடியம்பட்டி பகுதியில் செல்லத்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செந்தூரப் பிரியா என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு மதுபாலா என்ற மகளும், சூரிய பிரகாஷ் என்ற மகனும் உள்ளனர். கடந்த ஆகஸ்ட் 29 – ஆம் தேதியன்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை பகுதியில் செல்லத்துரை குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையில் உள்ள மரத்தின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் செல்லதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் இந்த விபத்தில் மனைவி மற்றும் குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்லதுரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.