Categories
தேசிய செய்திகள்

மிகுந்த கண்காணிப்பு கொண்ட நகரங்களின் பட்டியல்…. சென்னைக்கு எத்தனாவது இடம் தெரியுமா…?

உலகில் அதிக கண்காணிப்பு பகுதிகளாக போப்ஸ் இந்தியா வெளியிட்டுள்ள 20 நகரங்களில் பட்டியலில் சென்னைக்கு 3-வது இடம் கிடைத்துள்ளது.

உலகில் தங்கள் நாட்டின்  மீது அதீத கவனம் செலுத்தும் 20 நகரங்களின் பட்டியலை போர்ப்ஸ் இந்தியா வெளியிட்டது. இதில் ஒரு சதுர மைல் பரப்பில் நிறுவப்பட்ட சிசிடிவி கேமராக்களை அடிப்படையாகக்கொண்டு அதிக கண்காணிப்பு உள்ள நகரங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதன்படி உலக அளவில் அதிக கண்காணிப்பு கேமராக்களை நிறுவியுள்ள முதல் நகரமாக இந்தியாவின் தலைநகர் டெல்லி தேர்வு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் 1 சதுரம் மையிலுக்கு 1,827 கேமராக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது.

இரண்டாவது இடத்தை இங்கிலாந்தின் தலைநகர் லண்டன் பெற்றிருக்கின்றது. இந்த பட்டியலில் தமிழகத்தின் தலைநகர் சென்னை மூன்றாவது இடத்தை பிடித்திருப்பது. இந்த பட்டியலில் தமிழகத்தின் தலைநகர் சென்னை 3-வது இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் ஒரு சதுர மைலுக்கு 610 கேமராக்கள் நிறுவப்பட்டு இருக்கின்றன.  நியூயார்க், லண்டன், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களை பின்னுக்குத்தள்ளி உலக அளவில் டெல்லி முதலிடம் பிடித்திருப்பது குறித்த டெல்லி முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்,

Categories

Tech |