திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் உண்டியல் வருமானம் மூன்று கோடியை கடந்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டு உள்ளனர். கடந்த சில மாதங்களாக கொரோனா காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தற்போது பாதிப்பு குறைந்து கொண்டு வருவதன் காரணமாக சமீபத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதை அடுத்து சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். அந்த வகையில் திருப்பதி கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தற்போது சென்று வருகின்றனர்.
உண்டியலில் காணிக்கை செலுத்தி வருகின்றனர். அதேபோன்று வேண்டுதலை நிறைவேற்ற முடி காணிக்கையும் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் 20 ஆயிரத்து 807 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 11 ஆயிரத்து 250 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் வருமானம் ஆக 3 கோடியே 30 லட்சம் கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.