சென்னை மாதவரம் அருகே காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்தால் இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டம் பொன்னிஅம்மன்மேடு பஜனை கோவில் தெருவை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டதில் வெங்கடேசன் ரமேஷ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் ரமேஷுக்கு போன் செய்து விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு வரக்கூறி வற்புறுத்தியதாகவும்,
ஆகையால் நான் சாக போவதாகவும் தனது நண்பருக்கு தகவல் தெரிவித்துவிட்டதோடுஇறுதியாக அம்மாவை மட்டும் நன்றாக பார்த்துக்கொள் நண்பா என்று கூறி விட்டு வில்லிவாக்கம் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பான ஆடியோவும் வெளியாகியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் வெங்கடேசன் கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்ததன் பேரில் மக்கள்கலைந்து சென்றனர்.