கொரோனா வைரஸ்க்கு எதிராக புதிய தடுப்பு மருந்துகளை போர்ச்சுக்கல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கொரோனா வைரஸ்க்கு எதிராக பல்வேறு நாடுகள் தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா பாதிப்பை தடுக்கும் மூன்று மருந்துகளை போர்ச்சுக்கல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த மருந்தை லிஸ்பன் நோவா பல்கலைக்கழகத்தின் இரசாயன மற்றும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாகியுள்ளனர். இந்த மூன்று மருந்துகளின் கூட்டு கலவையானது கொரோனா வைரஸின் உற்பத்தியை குறைக்கும் என்று கூறியுள்ளனர். இதுபற்றி சிசிலியா அர்ரியானோ என்ற ஆராய்ச்சியாளர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “இந்த எதிர்ப்பு மருந்தினால் வைரஸின் உற்பத்தியானது 50 சதவீதம் மட்டுமே வளர்ந்துள்ளது.
மேலும் வைரஸ் செயல்பாட்டை குறைப்பதற்காக NSP 14 என்ற வைரஸின் புரதத்தில் இருந்து மருந்துகளானது செயல்படுகிறது” என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த மருந்துகளானது மருத்துவமனையில் நோயாளிகள் சேர்வதைக் குறைக்கிறது. இதில் இரண்டு மருந்துகள் மற்ற நோய்களுக்கும் தடுப்பு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள மருந்து சந்தை ஒப்புதலுக்காக காத்திருப்பு பட்டியலில் உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். அதிலும் காப்புரிமை பிரச்சனையினால் மருந்துகளின் பெயர்கள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.