சாம்பாரில் மஞ்சள் தூளுக்கு பதிளாக சாணி பவுடரை தவறுதலாக கலந்து சாப்பிட முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெள்ளி வலசு பகுதியில் கூலித் தொழிலாளியான செங்கோட்டையன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி ஆடு மேய்க்க சென்ற சமயத்தில் செங்கோட்டையன் சாம்பார் வைத்துள்ளார். அப்போது செங்கோட்டையன் தவறுதலாக மஞ்சள் தூளுக்கு பதிலாக சாணி பவுடரை சாம்பாரில் கலந்துள்ளார். மேலும் சாம்பாரை செங்கோட்டையன் சோற்றில் ஊற்றி சாப்பிட்டுள்ளார்.
இதனால் கடந்த 2 நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த செங்கோட்டையனை உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர் ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி செங்கோட்டையன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்