தாய் இறந்த துக்கத்தில் இருந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அயன்ஆத்தூர் பகுதியில் மர வியாபாரியான கண்ணதாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வளர்மதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு வளர்மதியின் தயாரான ஜெகதாம்பாள் உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் தாயை இழந்த துக்கத்தில் மன உளைச்சலில் இருந்த வளர்மதி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வளர்மதியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து வளர்மதியின் தந்தை சிவஜோதி கயர்ல பாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.