Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இது என்ன சீட்டு….? வசமாக சிக்கிய வாலிபர்கள்…. கைது செய்த போலீஸ்….!!

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வாரச்சந்தை பகுதியில் தடை செய்யப்பட்டிருக்கும் லாட்டரி சீட்டுகளை விற்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த நிஜாமுதீன் மற்றும் இளவரசராஜா ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |