கஞ்சா விற்பனை செய்துவிட்டு பெண் இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள பார்த்திபனூர் பகுதியில் உள்ள வல்லம்பர் சந்தோஷ்குமார் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் கஞ்சா விற்பனை செய்வதாக பார்த்திபனூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சுதா தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர் கஞ்சா விற்பனை செய்த சந்தோஷ்குமாரை பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது அவர் வைத்திருந்த வாளை எடுத்து இன்ஸ்பெக்டர் சுதாவை தாக்க முயற்சி செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் காவல்துறையினர் சந்தோஷ்குமாரை வளைத்து பிடித்து கைது செய்து அவரிடம் இருந்த 1 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.