பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபா தனக்கு ஆண்மை இல்லை என்று சிபி சிஐடி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார். சிவசங்கர் பாபா மீதான பாலியல் குற்றச்சாட்டில் அவரது பள்ளியில் படித்த 3 மாணவிகள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் மூன்று வழக்குகள் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் மாணவிகளை மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக வழக்கில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சிபிசிஐடி போலீஸாரிடம் சிவசங்கர் பாபா தனக்கு ஆண்மையில்லை என்று பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், ஆண்மை இல்லாத நான் எப்படி பாலியல் தொந்தரவுகளில் ஈடுபட முடியும்? சென்னை அரசு பொது மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் தனது ஆண்மை இல்லை என்று தெரிய வந்துள்ளது என சிவசங்கர் பாபா கூறியுள்ளார். மகன் மற்றும் மகள் உள்ளபோது சிவசங்கர் பாபா ஆண்மையற்றவர் என அவர் எப்படிக் கூற முடியும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.