தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு பற்றி அரசு அறிவித்துள்ளது. அதன்படி கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு வேதியியல் பாட மதிப்பெண்கள் கட்டாயமில்லை என்று சற்று முன் தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கணிதம், இயற்பியல் பாடங்களுடன் வேதியியல் பாட மதிப்பெண் கட்டாயம் என இருந்த நிலையில், தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கணிதம், இயற்பியல், optional பாடம், 10, 12 ஆம் வகுப்பு மதிப்பெண், பிறந்த தேதி, ரேண்டம் எண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவித்துள்ளது.