Categories
தேனி மாவட்ட செய்திகள்

நிலை தடுமாறிய வாகனம்… தொழிலாளிக்கு ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தொழிலாளி நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி அடுத்துள்ள அணைபட்டியில் முரளி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று முரளி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்கும் தனது தம்பியை பார்பதற்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதனையடுத்து மருத்துவமனையில் இருந்து மீண்டும் வீட்டிற்கு திரும்பிய முரளி ராயப்பன்பட்டி வழியாக சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது அவரது இருசக்கர வாகனம் திடீரென நிலைதடுமாறி அப்பகுதியில் இருந்த தென்னந்தோப்பு வேலியில் மோதியுள்ளது. இந்த விபத்தில் முரளிக்கு பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக அவரை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் முரளி செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து ராயப்பன்பட்டி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |