ஹோட்டல் முன்பு நடிகை நயன்தாராவின் ரசிகர்கள் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவருக்கென தனியாக ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் நடிப்பில் வெளியான நெற்றிக்கண் திரைப்படமானது ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனை அடுத்து நயன்தாரா ஷாருக்கானுடன் இணைந்து நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியது. இந்த படத்தை இயக்குனர் அட்லீ இயக்குவதாகவும் தெரிய வந்ததுள்ளது. இதனை தொடர்ந்து இவர் இரண்டு கதாநாயகிகளை மையமாக வைத்து எடுக்கப்படும் படத்திலும் நடிக்கப் போவதாக கூறப்பட்டது.
Thalaivi shooting in pondicherry#LadySuperstar #Nayanthara pic.twitter.com/zJ2p0NLabY
— NAYANTHARA FANS CLUB INTERNATIONAL 🌎 (@NayantharaU_FC) August 21, 2021
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நயன்தாரா, சமந்தா போன்றோர் நடிக்கும் காத்து வாக்குல இரண்டு காதல் படத்தின் படப்பிடிப்பானது பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது. அதில் விஜய் சேதுபதி மற்றும் சமந்தாவின் காட்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் படப்பிடிப்பில் நயன்தாராவும் கலந்து கொண்டுள்ளார். அதற்காக அவர் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து வெளியேறும் பொது ரசிகர் கூட்டம் நயன்தாராவின் காரைச் சுற்றி சூழ்ந்தனர். மேலும் அவர்கள் கோஷமிட்டதால் ஹோட்டல் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.