வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. தர்மபுரி மாவட்டம் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகள், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், முருக்கேரி ஹனுமந்தை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. கள்ளக்குறிச்சி, விருதுநகர் மாவட்டங்கள், புதுச்சேரியில் மதகடிப்பட்டு, கனக செட்டிகுளம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
இதையடுத்து இன்று தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், தர்மபுரி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரியில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் அரபிக்கடல் பகுதிக்கு மூன்று நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.