Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உணவு தேடி சென்ற மான்…. வேலியில் சிக்கியதால் நடந்த விபரீதம்…. நல்லடக்கம் செய்த வனத்துறையினர்….!!

வேலியில் சிக்கி மான் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வல்லம்பட்டி கண்மாய் காட்டு பகுதியில் அதிகமான மான்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் ஒரு மான் உணவு தேடி வந்து வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துவிட்டது.

இது குறித்து அறிந்த ஊராட்சி மன்ற தலைவரான அந்தோணி என்பவர் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்துள்ளனர். அதன்பிறகு அதே பகுதியில் மானின் உடலை நல்லடக்கம் செய்துள்ளனர்.

Categories

Tech |