Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொரோனாவையும் பொருட்படுத்தாமல்… ரத்த தானம் செய்த தன்னார்வலர்கள்… பாராட்டிய மாவட்ட ஆட்சியர்…!!

கொரோனா காலத்திலும் ரத்தத்தை தானம் செய்த 25 தன்னார்வலர்களை பாராட்டி மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் அவர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கியுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் 14 ரத்த சேமிப்பு நிலையங்களும், 3 அரசு ரத்த வங்கிகளும் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டில் மாவட்டத்தில் உள்ள ரத்த வங்கிகள் மூலம் 5,077 யூனிட்டுகள் ரத்தம் சேகரிக்கப்பட்ட நிலையில் அதில் 2,308 யூனிட்டு ரத்தம் கர்பிணிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த ஆண்டில் ஜூன் மாதம் வரை 2,912 யூனிட்டு ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பெருந்தொற்று காலத்திலும் ரத்தம் கொடுக்க வந்த தன்னார்வலர்களை  பாராட்டும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு கூட்டம் நடைபெற்றுள்ளது.

அப்போது 25 தன்னார்வ ரத்ததான கொடையாளர்களை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் பாராட்டி அவர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமை தங்கியுள்ளார். மேலும் நாமக்கல் அரசு மருதுவகல்லுரி முதல்வர் சாந்தா அருள்மொழி, இணை இயக்குனர் ராஜ்மோகன், ரத்த பரிமாற்று அலுவலர் அன்புமலர், மாவட்ட திட்ட மேற்பார்வையாளர் மேரி லதா தாஸ், ரத்த வங்கி மருத்துவ அலுவலர்கள் என பலரும் பங்கேற்றுள்ளனர்.

Categories

Tech |