டெல்லியில் சாஸ்திரி பார்க் என்கின்ற பகுதியில் ஓடும் காரில் 22 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் காசியாபாத்தில் என்னும் பகுதியில் தனது கணவருடன் வசித்து வருகிறார். அந்த பெண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது செல்போனுக்கு ரோகித் என்பவரிடம் இருந்து அழைப்பு வந்தது. அவர் அந்தப் பெண்ணுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ஆகஸ்ட் 16ஆம் தேதி பெண்ணை காரில் அழைத்துச் சென்றுள்ளார்.
அந்த காரில் மற்றொரு நபரும் இருந்துள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து அந்த பெண்ணை ஓடும் காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். அந்தப்பெண் தைரியமாக வந்து புகார் கொடுத்த காரணத்தினால் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த இருவரையும் கைது செய்தனர்.