படிப்புக்கேற்ற வேலை கிடைக்காததால் வாலிபர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பட்டப்படிப்பு படித்து முடித்த கோவிந்தராஜ் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் கோவிந்தராஜ் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கோவிந்தராஜ் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோவிந்தராஜனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.