Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ரோந்து பணியின் போது …. வசமாக சிக்கிய வாலிபர்கள் …. கைது செய்த போலீசார் ….!!!

கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்து  விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர் .

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்துள்ள புதுப்பள்ளி பகுதியில் வேட்டைக்காரனிருப்பு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது புதுப்பள்ளி சக்கிலியன் ஆற்று இரண்டாவது  பாலத்தின் அடியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த இரண்டு  வாலிபர்களை பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர்.

இந்த விசாரணையில் அவர்கள் புதுப்பள்ளி பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (23), சிவசந்தன் (25)  என்பதும், இருவரும்  சிறுசிறு கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும்  தெரியவந்தது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் ராஜ்குமார், சிவசந்தன் ஆகிய இருவரையும் கைது செய்தனர் .

Categories

Tech |