Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. செப்டம்பர் 1 முதல் முதற்கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அரசு முடிவு செய்துள்ளது.இதுகுறித்து ஆகஸ்ட் 20-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிடுவார் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க 6 அடி இடைவெளியில் மாணவர்களை அமர வைக்க வேண்டும். மாணவர்களுக்கு கைகழுவும் வசதி, உடல் வெப்பநிலை அறியும் கருவி உள்ளிட்டவை பள்ளிகளில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. மேலும் எச்சில் துப்புவது தடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

Categories

Tech |