Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சைக்கிளில் சென்று கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. வேதனையில் வாடும் குடும்பத்தினர்….!!

சைக்கிளிலிருந்து திடீரென மயங்கி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள மேல்விஷாரம் புதுப்பேட்டை பகுதியில் ஜலால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஜலால் சைக்கிளில் வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து தென்னந்தியலம் தனியார் திருமண மண்டபம் அருகில் சென்று கொண்டிருக்கும் போது ஜலால் சைக்கிளிலிருந்து மயங்கிக் கீழே விழுந்துள்ளார்.

இதனைப் பார்த்த அருகிலுள்ளவர்கள் ஜலாலை உடனடியாக மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஜலால் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |