உத்தரபிரதேசத்தில் 3 மாத பெண் குழந்தையை 17 வயது சிறுவன் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் இட்டா மாவட்டத்தில் பல்வாலா என்ற சரகத்தில் 3 மாத பெண் குழந்தை இருந்துள்ளது. அப்பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுவன் அடிக்கடி அந்த குழந்தையை வந்து பார்த்து அவளுடன் விளையாடி கொண்டிருப்பான். சம்பவ தினத்தன்றும் அந்த சிறுவன் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது அந்த பெண் குழந்தையின் தாய் அவர் வீட்டில் வளர்த்து வரும் எருமை மாடுகளை கட்டி வைப்பதற்கு சென்றுவிட்டார். அப்பொழுது அந்த சிறுவன் சிறுமியை பார்த்துக்கொண்டிருந்தான்.
திடீரென்று சிறுமி அழுகுரல் கேட்டது. இல்ல வீடு திரும்பிய தாய் அந்த சிறுவனிடம் கேட்டபோது குழந்தை சிறுநீர் கழித்து விட்டதாக கூறி விட்டு அங்கிருந்து வெளியே சென்றான். அப்போது குழந்தையின் பிறப்பு உறுப்பில் இருந்து ரத்தம் வருவதைப் பார்த்த அவருடைய தாய் குழந்தைக்கு நடந்ததை புரிந்து கொண்டு அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த சிறுவனை தேடி வருகின்றனர்.