தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தமிழகத்தில் குறைந்து கொண்டே வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுபடுத்த திருவண்ணாமலை மற்றும் காட்டாம் பூண்டி உள்ளிட்ட சில மருத்துவ வட்டார பகுதிகளில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருவதாக அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்கும். மேலும் ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். கட்டுப்பாடுகளை மீறி செயல்படும் மக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.