Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செல்போனில் மிரட்டிய நண்பர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

திருமணம் நிச்சயமான இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள அயனாவரம் பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் இருந்துள்ளனர். இவர்களது இரண்டாவது மகளான ஷாலினி என்பவர் ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ஷாலினிக்கும் திருவண்ணாமலையை சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் நடத்த பெற்றோர்கள் நிச்சயம் செய்துள்ளனர். இதனையடுத்து இரவு நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த ஷாலினி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஷாலினியின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஷாலினி தனது நண்பர் ஒருவரிடம் பேசி வந்ததாகவும், அவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ஷாலினியை மிரட்டியதும் தெரியவந்துள்ளது. இதனால் வாழ்க்கையை வெறுத்த ஷாலினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Categories

Tech |