தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அது மட்டுமல்லாமல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் செய்து வருகிறார். மேலும் அனைத்து துறைகளிலும் பல மாற்றங்களும் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் மாடம்பாக்கத்தில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோவிலில் ஓதுவாராக சுஹாஞ்ஜனா என்ற பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டின் முதல் பெண் ஓதுவார் என்ற பெருமையை பெற்றுள்ளார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் இந்த பணி நியமனம் ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதனால் கருவறைக்குள் பெண் செல்லக்கூடாது என்ற நடைமுறை தவிர்க்கப்பட்டுள்ளது.