Categories
தேசிய செய்திகள்

மாதம் ரூ.3,000 பென்சன்….. விவசாயிகளுக்கு மத்திய அரசின் சிறந்த பென்சன் திட்டம்….!!!

மத்திய அரசு விவசாயிகளுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அதன்படி பிரதமரின் கிசான் மந்தன் யோஜன திட்டத்தின் கீழ் விவசாயிகள் அனைவருக்கும் மாதம் 3000 ரூபாய் பென்ஷன் வழங்கப்படுகிறது. மத்திய அரசின் பிஎம் கிசான் மந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பென்சன் வழங்கப்பட்டு வருகிறது. இடையில் இணையும் விவசாயிக்கு இரண்டு ஹேக்டேருக்கு குறைவான சாகுபடி நிலம் இருந்தால் மட்டுமே இந்தத் திட்டத்தில் பயன்பெற முடியும். 18 வயதாக இருக்கும்போதே இந்த திட்டத்தில் இணைந்தால் ஒவ்வொரு மாதமும் 55 ரூபாய் பங்களிப்பு வழங்க வேண்டும். 30 வயதில் இணைந்தால் ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் பங்களிப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு முதலீடு செய்வதன் மூலம் ஓய்வு காலத்தில் ஒவ்வொரு மாதமும் 3000 ரூபாய் பென்ஷன் வாங்கலாம். மேலும் இந்தத் திட்டத்தில் இணையும் விவசாயிக்கு தனது அறுபதாவது வயதில் வங்கி கணக்கில் குறைந்தது 3 ஆயிரம் ரூபாய் வந்து சேரும். இந்தத் திட்டத்தில் பயன் பெறு வதற்கான வயது வரம்பு 18 முதல் 40 ஆக இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் இணையும் விவசாயி தனது அறுபதாவது வயதில் மாதத்துக்கு 55 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை பிரீமியம் செலுத்த வேண்டும். மேலும் விவசாயிகள் இந்த திட்டத்தில் இணையும் வயதைப் பொறுத்து பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும்.

இதில் இணைவதற்கு maandhan.in என்ற முகவரியில் செல்ல வேண்டும். ஆதார், வங்கி கணக்கு புத்தகம் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ போன்றவற்றை வைத்து இந்தத் திட்டத்தில் இணையலாம். விவசாயிகள் விரைவாக இந்த திட்டத்தில் இணைந்தால் அதிக பயன் கிடைக்கும். தாமதமாக இணைந்தால் நீங்கள் அதிக பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும்.

Categories

Tech |