Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வலியால் அவதிப்பட்ட தையல் தொழிலாளி… விரக்தியில் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த தையல் தொழிலாளி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள பில்லூர் கிராமத்தில் தங்கவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மகன் மணி தையல் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் மணி கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும், மருந்துகள் சாப்பிட்டும் சரியாகாததால் மணி மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து மணி மயக்கமடைந்து இருப்பதை பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவரை மீட்டு நாமக்கல் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி மணி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |