வட இந்தியாவின் பல மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் மின்னல் தாக்கியதில் 71 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜூலை மாதம் 19ஆம் தேதி முதல் பெய்து வரும் பருவ மழையால் இமாச்சலப் பிரதேசத்தின் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. காஷ்மீரில் ஜம்மு நெடுஞ்சாலை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளது. தாவி என்ற இடத்தில் மின்னல் தாக்கியதில் இரு சிறுவர்கள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை போலவே ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்திரப்பிரதேசத்தில் மின்னல் தாக்கிய 42 பேர் வரை பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக அலகாபாத்தில் 14 பேரும், ஜெய்ப்பூரில் 12 பேரும் மின்னல் தாக்கி உயிர் இழந்துள்ளனர்.
Categories
மின்னல் தாக்கி 71 பேர் உயிரிழப்பு…. பெரும் அதிர்ச்சி…..!!!!!
