Categories
மாநில செய்திகள்

சென்னையில் 6 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல்… போலீசார் தீவிர விசாரணை….!!!

சென்னையில் தியாகராய நகர் உள்ளிட்ட 6 இடங்களில் தனியார் ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுதந்திர தினம் வரவுள்ள நிலையில் வெடிகுண்டு வெடிக்கும் என்று இ-மெயில் வாயிலாக மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி சென்னையில் தியாகராய நகர் உள்ளிட்ட 6 ஹோட்டல்களில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகின்றது. அங்கு வெடிகுண்டு வெடிக்கப் போவதாக தனியார் ஹோட்டலுக்கு இமெயில் மூலம் குறுந்தகவல் ஒன்று இன்று காலை வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த தனியார் ஹோட்டல் நிர்வாகம் நேரடியாக சென்னை காவல் ஆணையருக்கு அந்த மெயிலை அனுப்பி புகார் அளித்துள்ளனர். புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இன்னும் மூன்று நாட்களில் சுதந்திர தினம் வர உள்ள நிலையில், இப்படி வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |