Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு…. காங்கிரஸ் கட்சியினரின் போராட்டம்…. விருதுநகரில் பரபரப்பு….!!

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து அருப்புக்கோட்டை பகுதியில் இளைஞர் காங்கிரஸ் கட்சியின் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவரான மீனாட்சிசுந்தரம் முன்னிலை வகித்துள்ளார்.

அதன்பிறகு காங்கிரஸ் கட்சியினர் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை பெயர் மாற்றம் செய்யக்கூடாது எனவும், மத்திய அரசை கண்டித்தும் இந்தப் போராட்டத்தை நடத்தியுள்ளனர். மேலும் இந்த போராட்டத்தில் எஸ்.சி. துறைத்தலைவர், சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Categories

Tech |