சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள மூன்று திரைப்படங்கள் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் காமெடி கதாநாயகனாக கலக்கி வந்தவர் சந்தானம். தற்போது இவர் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். கடைசியாக சந்தானம் நடிப்பில் தியேட்டரில் வெளியான பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் ஸ்ரீநிவாச ராவ் இயக்கத்தில் சபாபதி படத்திலும், ஆனந்த் பால்கி இயக்கத்தில் சர்வர் சுந்தரம் படத்திலும், கார்த்திக் யோகி இயக்கத்தில் டிக்கிலோனா படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் இந்த மூன்று திரைப்படங்களும் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது .