Categories
மாநில செய்திகள்

13 ஆயிரம் கிராமங்களில்…. பாஜக சார்பில் தன்னார்வலர்கள் குழு… அண்ணாமலை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள 13 ஆயிரம் கிராமங்களில் பாஜக சார்பில் தன்னார்வலர்கள் குழு அமைக்கப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பாஜக சார்பில் சுகாதார தன்னார்வலர்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தேசிய செயலாளர் சுதாகர் ரெட்டி, மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாநில பொதுச் செயலாளர் கே டி ராகவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 13 ஆயிரம் கிராமங்களில் பாஜக சார்பில் தன்னார்வலர்கள் குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்த குழு வீடு வீடாய் சென்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும். இக்குழுவில் கிராமத்திற்கு இருவர் நியமிக்கப்படவுள்ளனர். டிசம்பர் 20-ஆம் தேதிக்குள் கொரோனா இல்லாத நிலையை உருவாக்குவதே இதன் நோக்கம் என்று அவர் தெரிவித்தார். மேலும் இந்தியாவில் 53 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு அதிகமான தடுப்பூசி கொடுத்துள்ளனர் என திமுகவே வாய் தவறி கூறியுள்ளது. மூன்றாவது அலையை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |