கத்தோலிக்க பாதிரியாரை கொலை செய்த ருவாண்டா அகதி தாமாகவே முன்வந்து போலீஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 60 வயதான கத்தோலிக்க பாதிரியார் Mortagne-sur-Sèvre- ஆவார். இவரை ருவாண்டா அகதியான Emmanuel Abayisenga, என்பவர் கொலை செய்துள்ளார். இதனை அவரே கடந்த திங்கட்கிழமை அன்று காவல் நிலையத்தில் சென்று குற்றத்தை ஒப்புக் கொண்டு சரணடைந்துள்ளார். இதனை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதிரியாரின் உடலை மீட்டுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலையில் Nantes தேவாலயத்திற்கு தீவைத்த குற்றத்தில் இமானுவேல் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் இருந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இவரின் வசிப்பிட விண்ணப்பத்தை நிராகரித்தற்காக பழிவாங்கும் நோக்கில் தேவாலயத்திற்கு தீ வைத்ததாக பிரான்ஸ் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.