Categories
தேசிய செய்திகள்

“காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம்”… விரக்தியில் போலீஸ் ஏட்டு எடுத்த விபரீத முடிவு… ரேணிகுண்டாவில் அதிர்ச்சி சம்பவம்…!!!

ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் போலீஸ் ஏட்டு ஒருவர் காதல் தோல்வியின் காரணமாக துப்பாக்கியால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தை சேர்ந்த ஆனந்த் ராவ் என்பவர் சித்தூர் மாவட்டத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசில் தலைமை காவலராக வேலை பார்த்து வருகிறார். சொந்த ஊருக்கு விடுமுறையில் சென்ற ஆனந்த் கடந்த 2ஆம் தேதி பணிக்கு திரும்பியுள்ளார். இரவு பணியில் இருந்த அவர் அதிகாலை 4 மணிக்கு ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்தில் உள்ள ஸ்டோர் ரூம் ஒன்றில் துப்பாக்கியால் தனது கழுத்தில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடிச்சென்று ஸ்டோர் ரூமை திறந்து பார்த்தபோது ஆனந்தராவ் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

பின்னர் இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ஆனந்தராவ் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும், அந்த பெண்ணிற்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்ததால், மனமுடைந்த ஆனந்த ராவ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவம் தொடர்பாக அவரின் பெற்றோரிடம் விசாரணை நடத்திவருகின்றனர். ரயில் நிலையத்தில் போலீஸ் ஏட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |