Categories
தேசிய செய்திகள்

இனி திருநங்கைகளுக்கும் ரேஷன் கார்டு…. கேரள அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

நியாய விலைக் கடைகள் மூலம் மக்களுக்கு மலிவு விலையிலும், இலவசமாகவும் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மக்களும் வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பேரிடர் காலங்களில் கொடுக்கப்படும் நிதியுதவி, அரசின் நலத்திட்ட உதவிகள் ஆகியவைகளும் ரேஷன் கார்டு மூலமாகவே மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வீதிகளில் தஞ்சம் அடைந்தவர்களுக்கும், வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கும், திருநங்கைகளுக்கும் ரேஷன் கார்டு வழங்கப்படும் என்று கேரள உணவு மற்றும் சிவில் சப்ளை அமைச்சர் ஜி.ஆர் அனில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், வாடகை வீட்டில் வசிப்போர் சுய பிரமாண பத்திரங்களை சமர்ப்பித்தால் ரேஷன் கார்டு கொடுக்கப்படும். தெருவில் வசிப்பவர்களுக்கு, வீடற்றவர்களுக்கும்,  திருநங்கைகளுக்கும் ரேஷன் கார்டு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும். மேலும் இவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்குவது மட்டுமல்லாமல், ஓணம் சிறப்பு தொகுப்பும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |